tamilnadu

img

உ.பி: 10 ஆம் தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை , 388 பள்ளிகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைந்த தேர்ச்சி

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, காப்பியடிப்பதை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வில், 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சியடையவில்லை. 388-கும் அதிகமான பள்ளிகளில் 20 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சியடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வின் போது, காப்பியடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதே, தேர்வு முடிவுகள் இவ்வாறு மாறியதற்கு காரணம் என உத்திரப் பிரதேச பள்ளித் தேர்வு வாரிய இயக்குனர் வினய் குமார் பாண்டே தெரிவித்தார். 

கடந்தகாலங்களில் நடைபெற்ற தேர்வுகளின்போது மாணவர்களை காப்பியடிக்க வைத்து தேர்ச்சியை அதிகரித்துக் காட்டிய 13 பள்ளிகளில் இம்முறை ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.